79 ஆவது சுதந்திர தின விழா சீனிவாசா சுப்பராயா அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. கல்லூரியின் முதல்வர் முனைவர் A. குமார் அவர்கள் நமது தேசிய கொடியை ஏற்றி சிறப்புரையாற்றினார்.
நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் முனைவர். ராதா அவர்களும் இளைஞர் செஞ்சிலுவை சங்கம் ஒருங்கிணைப்பாளர் முனைவர் B. தாமரைச்செல்வி அவர்களும் 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு போட்டிகளையும் கலை நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்தனர்
இப்போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.
இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப் பணி அலுவலர் திரு. தமிழ்ச்செல்வன் மற்றும் உடற்கல்வி இயக்குனர் முனைவர். R. உமாநநாத் செய்திருந்தனர்.







